கொள்கை-07 காவலர்களுக்கு சங்கம் வைக்க அனுமதி

பெண் காவலர்களின் பாதுகாப்பும் நலனும் உறுதி செய்யும் திட்டம் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் குடும்ப நலன் உறுதி செய்யப்படுவது எங்கள் கட்சியின் முக்கியக் கடமையாகும். அவர்களின் உடல், மன மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு பின்வரும் சீர்திருத்தங்களை மேற்கொள்வோம். 1. பணிநேர சீர்திருத்தம் பெண் காவலர்களுக்கு 8 மணி நேர பணி மட்டுமே வழங்கப்படும். பணிநேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. இரவு…

மேலும் படிக்க

200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நில அளவை கொள்கை-06

முழுமையான நில கணக்கெடுப்பு மற்றும் நில பாதுகாப்பு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், நிலங் கள் மற்றும் விவசாயப் பகுதிகள் குறித்து, கடந்த இருநூறு ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில் விரிவான நில கணக்கெடுப்பு மேற் கொள்ளப்படும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப் பிற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போலவே, நிலவளங்களின் துல்லியமான கணக் கெடுப்பும் மிக முக்கியமானதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர முடியும். கணக்கெடுப்பின் நோக்கங்கள் நில வளங்களின் முழுமையான புள்ளிவிவரம்…

மேலும் படிக்க

10 லிட்டர் கள்ளு இலவசம்

1. குடும்ப அட்டைக்கு இலவச கள்ளு வழங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதந்தோறும் 10 லிட்டர் கள்ளு இலவசமாக வழங்கப்படும். 2. தென்னை மற்றும் பனை விவசாயிகளுக்கான பாதுகாப்பு தமிழகத்தின் அனைத்து விவசாய நிலங்களிலும் உள்ளதென்னை மரங்களும், பனை மரங்களும் அரசால் குத்தகைக்கு எடுக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படும் கள்ளு (தீர்த்தம்) அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.. 3. விவசாயிகளுக்கான பொருளாதார முன்னேற்றம் கள்ளு உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் ஏற்படும்…

மேலும் படிக்க

நமது கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

16/03/2026 அன்று காலை 10:00 மணி அளவில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள நமது கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகு தியில் போட்டியிடுவது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நமது கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆனால் தேர்தல் முடிந்த பின்பு தான் பதிவு எண்கள் வழங்கப்படும் என்று தெரிவித்து விட்டதால் நமது கட்சியின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் சுயேச்சையாக…

மேலும் படிக்க

திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம் ஏன் எதற்காக என்று பார்ப்போம்

உலக தமிழர் சங்கமம் அறக்கட்டளை என்பது வரும் சட்டசபை தேர்தல் வரை மட்டுமே பின்பு இந்த அறக்கட்டளை அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் பண்பாட்டு கொள்கைகள் சுருக்கமாக!! கொள்கை {1} திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்குவோம் ஏன் எதற்காக என்று பார்ப்போம். தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை இருக்கும் வரை தமிழர் குல மக்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைக்கவே கிடைக்காது. தமிழ்நாட்டை பிற மொழியாளர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரத்திலும் அதிகாரிகளாகவும் அமர்ந்து உள்ளார்கள். இதை…

மேலும் படிக்க

தூய்மை பணியாளர் வீட்டில் PTK தலைவர்

சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கித் தூய்மை பணியாளர் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் இதற்கு மாநகராட்சி 10 லட்சம் மற்றும் குப்பை ஒப்பந்தக்காரர்கள் 10 லட்சம் கொடுத்து உள்ளார்கள் இறந்த பெண்மணி மாநகராட்சி பணியாளர் கிடை யாது ஒப்பந்தக்காரர் மூலம் பணியாற்றி வந்தார். மாநகராட்சி குப்பைகள் அள்ளும் பணியைத் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு காண்ட்ராக்ட் மூலம் தாரைப் பார்த்து உள்ளது இந்த வேலைக்கு ஆண்கள் பல பெண்கள் என்று பணியாற்றி வருகிறார்கள் பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா…

மேலும் படிக்க