ரிதன்யா மரணம் – பாசத்துக்கும் பாசாங்குக்கும் இடையே ஒரு உயிர் மடிந்தது!

ரிதன்யா – அழகான தமிழ் பெயர், விஜய் டிவி புகழின் மகளின் பெயராகவும் பரிசில் கிடைத்தது. ஆனால், இன்று அந்த பெயர் தமிழகமெங்கும் ஒரு மன வேதனையின் சின்னமாக பேசப்படுகிறது.

அவள் ஒரு மதிப்புமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவள். தந்தையின் பாசத்தால் வளர்க்கப்பட்டு, ஐந்து கோடியே மதிப்பிலான மணவிழாவில் பாசத்தோடு கட்டிக்கொடுக்கப்பட்டாள். ஆனால் அந்த பாசமும், அதன் பின்னனியிலிருந்த மறைந்த patriarchal culture-ஐ யாரும் கவனிக்கவில்லை.

திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல்கள் தொடங்கின. கணவனின் குடும்பத்திலிருந்த அழுத்தங்கள், நம்பிக்கையின்மை, தனிமைப்படுத்தல் ஆகியவைகள் மன அழுத்தமாக மாறின. ரிதன்யா, “இந்த உலகில் எதற்கும் போராட வலிமை இல்லை. அப்பா, என்னை மன்னிக்கவும்” என சோகமொடு உயிரை விட்டுச் சென்றாள்.

இந்த மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது:

  • எவ்வளவு வசதியுள்ள குடும்பமாக இருந்தாலும், வாழ்க்கை அனுபவம் இல்லாமல் வளர்க்கப்படும் “பொன் குஞ்சன்” mentality எங்கே கொண்டு செல்கிறது?

  • பெண்களுக்கு முழுமையான சுதந்திரம், தன்னம்பிக்கை, வேலை, வெளிநாட்டு அனுபவம் ஆகியவை தரப்படுகிறதா?

  • “அவனே தெய்வம்” என்ற போதனைகளால் பெண்கள் தங்கள் விருப்பங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களா?

இந்த மரணம், பெண்களின் எதிர்கால வாழ்க்கை, ஆண்களின் விழிப்புணர்வு, பெற்றோரின் பாசத்துக்குள் மறைந்த கட்டுப்பாடுகள், அனைத்தையுமே சுட்டிக்காட்டுகிறது.