இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி வளர்ச்சி அடையவில்லையா?
சமீபத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சருக்குக் கே.என். நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியது கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அன்றைய மாவட்ட ஆட்சியர் இதைச் சொன்னார். அதற்கான விளக்கங்களையும் நாங்கள் தந்திருக்கிறோம். திருச்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை திருச்சியில் உள்ள நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் சொன்னால்? நாங்கள் வளர்ந்திருக்கிறோம்….
